கிணத்துக்கடவு அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி - வனத்துறை விசாரணை!

கோவை கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் கிராமத்தில் இருந்து பணப்பட்டி செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது குறித்து வனத்துறை விவசாரணை நடத்திவருகிறது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் இருந்து பணப்பட்டி செல்லும் சாலையோரங்களில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் புள்ளிமான்கள் அதிகம் உள்ளது.



இந்த நிலையில் நேற்றிரவு சாலையில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியதில், அது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.



இன்று காலை வழக்கம்போல் அவ்வழியாக சென்ற மக்கள், இறந்து கிடந்த புள்ளி மானைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் புள்ளிமான் இறப்பு குறித்து கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



புள்ளிமான் உண்மையிலேயே வாகனம் ஏதும் மோதி உயிரிழந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்கிற கோணத்தில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....