தொழில்துறையில் தமிழகம் முதலிடம் - கோவையின் பங்கு என்ன? - ஒரு பார்வை

மின் மோட்டார் பம்பு செட்டில் ஆரம்பித்து விவசாயம் சார்ந்த ஜவுளி தொழிலுக்கான உபகரணங்கள், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் என அனைத்து தொழில் துறைகளுக்குமான அடித்தளமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படக்கூடிய கோயம்புத்தூரே இன்றளவும் இருந்துவருகிறது.



கோவை: இந்தியாவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்துவருவதற்கு முக்கிய காரணமான மாவட்டம் கோவை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை தொழிற்துறையின் வெற்றிப்பின்னணி மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் 16.6% தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்குகின்றன. அதனடிப்படையிலேயே இன்று தொழில் துறையில் தமிழ்நாடு முதலிடம் என்ற அரியணையை அலங்கரித்திருக்கின்றது.

தமிழ்நாட்டின் இந்த பெருமைக்கும் வெற்றிக்கும் வித்திட்ட தொழில் நகரங்களில் முக்கியமானது, சொல்லாப்போனால் முதன்மையானது கோயமுத்தூர் தொழில் நகரம். தென்னிந்தியாவின் மான்ஸெஸ்டர் என்று அழைக்கப்படும் கோயமுத்தூர் குடிசை, சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் என தொழில் வளத்தில் சிறந்து விளங்கி வருகின்றது. லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கோயமுத்தூரின் தொழில் துறை, தொழில் நகரங்களின் முன்னோடியாக பார்ப்பதன் பின்னணி சுவாரஸ்யமானது.

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் இன்று நம் நாட்டில் வேரூன்ற, நாட்டில் பசுமை புரட்சி ஏற்பட மின் மோட்டார் பம்பை நாட்டிலேயே முதன்முதலாக தயாரித்து சந்தைப்படுத்தியது கோயமுத்தூர் தொழில் நகரம்தான். மின் மோட்டார் பம்பு செட்டில் ஆரம்பித்து விவசாயம் சார்ந்த ஜவுளி தொழிலுக்கான உபகரணங்கள், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் என அனைத்து தொழில் துறைகளுக்குமான அடித்தளமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படக்கூடிய கோயம்புத்தூரே இன்றளவும் இருந்துவருகிறது.

தொழில்துறையில் துணிச்சலான மேலாண்மை திறன், கடின உழைப்பு, தரமான தயாரிப்பு, எதிர்கால திட்டமிடல், நவீன சார்பு உள்ளிட்டவை கோயமுத்தூர் தொழில் நகரத்தின் வெற்றிக்கான குறியீடுகள். இப்படிப்பட்ட தனித்துவமான கோயமுத்தூர், தன் பெருமையை தக்க வைத்துக்கொள்ள தன்னை காலத்திற்கேற்ப புதுமைப்படுத்திக் (அப்டேட்) கொள்வது அவசியம். தொழில்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில், சவால்களை எதிர்த்து சாதனை படைக்க நவீன தொழில்நுட்பத்தை கோயம்பத்தூர் தொழில் நகரம் நாடி இருக்கிறது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...