தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசு - சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன்பு தேவாரம்‌ பாடும்‌ 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் அறிவித்துள்ளார்.


கோவை: கோவை பக்தி நயம்‌ ததும்பும்‌ தேவாரம்‌ பாடல்களை ஆதியோகி முன்பு பாடி அர்ப்பணிக்கும்‌ குழந்தைகளுக்கு தினமும்‌ சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று சத்குரு தெரிவித்துள்ளார்‌.

இது தொடர்பாக அவர்‌ வெளியிட்டுள்ள ட்விட்டர்‌ பதிவில்‌, தேவாரம்‌ ஆழமான பக்தி மற்றும்‌ உயிரோட்டத்தை வளர்த்து, இந்த தன்மைகளை ஒருவரது வாழ்வின்‌ அடித்தளமாக்குகிறது. ஆதியோகி முன்‌ தேவாரம்‌ பாடும்‌ 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும்‌ சிறப்புப்‌ பரிசுகளை வழங்க உள்ளோம்‌! தமிழ்நாட்டுக்‌ குழந்தைகள்‌ தங்கள்‌ ஆழமான கலாச்சாரத்தை அறியவேண்டும்‌ என கூறியுள்ளார்‌.

இது தொடர்பாக ஈஷா மஹாசிவராத்திரி விழாவில்‌ பேசிய சத்குரு, "12 வயதுக்கு கீழ்‌ உள்ள தமிழ்‌ குழந்தைகள்‌ நம்‌ நாட்டில்‌ எங்கிருந்தாலும்‌, வெளிநாடுகளில்‌ இருந்தாலும்‌ இங்கு வந்து தேவாரப்‌ பாடல்‌ பாடினால்‌ அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும்‌. இது ஆண்டு முழுவதும்‌ எந்த நாளிலும்‌, தமிழ்‌ குழந்தைகள்‌ எங்கிருந்து வந்தாலும்‌ ஆதியோகி முன்பு தேவாரம்‌ பாடிவிட்டு அவர்கள்‌ பரிசுகளை பெற்றுக்‌கொள்ளலாம்‌. கிராமங்கள்தோறும்‌ ஆயிரக்கணக்கான குழந்தைகள்‌ தேவாரம்‌ கற்றுக்கொண்டு ஆதியோகி முன்பு தேவாரம்‌ பாட நீங்கள்‌ அனைவரும்‌ உறுதி எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌. இதை நாம்‌ அனைவரும்‌ நிகழ செய்ய வேண்டும்‌" எனக்‌ கூறினார்‌.

மஹாசிவராத்திரி விழா, தில்லை வாழ்‌ அந்தணர்‌ தம்‌ அடியார்க்கும்‌ அடியேன்‌' என்ற தேவாரப்‌ பாடலுடன்‌ துவங்கியது. அதேபோல்‌ விழா நிறைவு பெறுவதற்கு முன்னரும்‌ 'மாதர்‌ பிறை கண்ணி யானை' என்ற தேவாரப்‌ பாடல்‌ பாடப்பட்டது.ஈஷாவில்‌ உள்ள சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களுக்கு தேவார, திருவாசகப்‌ பாடல்கள்‌ கற்றுக்‌ கொடுக்கப்படுகிறது. அதேபோல்‌ அந்த மாணவர்கள்‌ பாடி, சவுண்ட்ஸ்‌ ஆஃப்‌ ஈஷா வெளியிட்ட தேவாரப்பாடல்‌ ஆல்பம்‌ மிகுந்த வரவேற்பை பெற்றதோடு, அனைவராலும்‌ வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...