கூடலூர் அருகே வலம் வரும் மக்னா யானை - வனத்திற்குள் விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு!

கூடலூர் அருகே பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும், மக்னா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.



நீலகிரி: கூடலூர் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை விரட்ட வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் உணவு தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட தேன் வயல், குளில் வயல், போஸ்பாரா போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்னா யானை ஊருக்குள் வந்து, பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.



குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் குழுக்களாகப் பிரிந்து இரவு, பகலாக அந்த ஒற்றை மக்னா யானையை கண்காணித்து வந்த நிலையில், அந்த யானையை விரட்ட முதுமலை யானைகள் முகாமிலிருந்து கணேசன் மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...