அதிமுக தலைமை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கடந்த ஜூலை 11ஆம் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி, டிடிவி. தினகரன், ஜெயக்குமார் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.



சென்னை: அதிமுக பொதுக்குழு நடைபெற்றது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக தலைவர்களின் தெரிவித்த கருத்து என்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம்...

எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர்



மதுரையில் உள்ள அம்மா கோயிலுக்கு சென்று வழிபட்டேன், அப்போது, எம்.ஜி.ஆர், ஜெயலிலாதாவின் அருளால் நல்ல தீர்ப்பு வேண்டும் என்று அவர்களிடம் வேண்டினேன். இந்த தீர்ப்பு சக்தி மிக்க தலைவர்கள் தெய்வங்களாக மாறி கொடுத்த வரப்பிரசாதம். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களை காக்கின்ற தீர்ப்பாக இன்றைய தீர்ப்பு வந்திருக்கிறது.

ஜெயக்குமார், முன்னாள் அதிமுக அமைச்சர்



அரசியலில் இனி ஓபிஎஸ்-இன் எதிர்காலம் ஜீரோதான். கௌரவர்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் வரலாற்றில் அவர்கள் வெற்றி பெற முடியாது, பாண்டவர்களான எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி தினகரன் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் எப்போதும் இடமில்லை. அவர்கள் தவிர மற்றவர்கள் வந்தால் ஏற்றுக் கொள்வோம்.

டி.டி.வி தினகரன், அமமுகவின் பொது செயலாளர்







உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றி மட்டுமே, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை கொடுக்கப்பட்டால் அதிமுக இன்னும் பலவீனமடையும்.

வைத்திலிங்கம், ஓபிஎஸ் ஆதரவாளர்



நீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு பாதிப்பு கிடையாது. பொதுக்குழு செல்லும் என்று மட்டுமே நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடுப்போம்.

புகழேந்தி, ஓபிஎஸ் ஆதரவாளர்



சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் கட்சித் தலைமை யாருக்கு என்பது குறித்து ஏற்கனவே சிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதை சிவில் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டு இருந்தது. அதனால் முழு தீர்ப்பையும் படித்த பின்பு கருத்து தெரிவிக்கிறேன்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...