ஊட்டி பந்தலூர் அருகே செந்நாய் கடித்து எருமைக் கன்று உயிரிழப்பு

பந்தலுார் அருகே வனப்பகுதியிலிருந்து வரும் செந்நாய்கள் கால்நடைகளை வேட்டையாடி வருவதால், அவைகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி கிராம மக்களை வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நேற்றிரவு கிராமத்திற்குள் புகுந்த செந்நாய், எருமைக் கன்றை வேட்டையாடி கொன்றது.


நீலகிரி: பந்தலுார் அருகே கிராமத்திற்குள் புகுந்து செந்நாய் எருமைக் கன்று வேட்டையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே சேலக்குன்னா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வீட்டில் வளர்த்த எருமைக் கன்று ஒன்று மாயமாகி இருந்தது. அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தபோது அருகே இருந்த புல்வெளியில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது.

இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த பிதர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வேட்டை தடுப்பு காவலர் கலைக்கோவில், வி.ஏ.ஓ.கர்ணன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

அதில் செந்நாய்கள் எருமையை வேட்டையாடியது தெரியவந்தது. கால்நடை மருத்துவர் ராஜராஜன் பிரேதப் பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில்,' இந்த பகுதியில் கால்நடைகளை விலங்குகள் வேட்டையாடி வரும் நிலையில், கால்நடை வளர்ப்போர் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். மக்களும் இரவில் இப்பகுதிகளில் நடமாட கூடாது என அறிவுறுத்தினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...