கோவையில் 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் - வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது

கோவை துடியலூர் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் போதைப் பொருட்களை ஒழிக்க தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் சரவணம்பட்டி- துடியலூர் சாலை ஆறுமுகம் ரைஸ் மில் அருகில் தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையில் வாகன சோதனை நடந்தது.

அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி காவல்துறையினர், சோதனை மேற்கொண்டதில் சந்தேகப்படும்படியாக இரு மூட்டைகள் இருந்தன. காவல்துறையினர் அதனை திறந்து பார்த்தபோது கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்தவர்களை துடியலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.



அதில், அவர்கள் பீகாரை சேர்ந்த சந்தன்குமார்(வயது30) மற்றும் அன்ஹித்குமார்(வயது19) என்பதும், அதில் சந்தன்குமார் காளப்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதும், அங்கு சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்ய எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.



இதனைத் தொடர்ந்து, சுமார் 7 லட்சம் மதிப்பிலான 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...