தாராபுரம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.8.5 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,155-ம் குறைந்தபட்சமாக ரூ.2,146 -ம் ஏலம் போனது.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கியம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை இந்தக் கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.



குறிப்பாக திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 40 ஆயிரம் கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.



அதற்கான மறைமுக ஏலம் நேற்று நடைபெற்றது. ஏலத்தில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிக பட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,155-ம் குறைந்த பட்சமாக ரூ.2,146 -ம் ஏலம் போனது.

அதன் மூலம் மொத்தமாக ரூ.8 லட்சத்து 56 ஆயிரத்து 898-க்கு மக்காச்சோளம் விற்பனையானது. மக்காச் சோளம் ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஒழுங்கு முறை கூடம் மேற்பார்வையாளர் அருள்குமார் செய்து இருந்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...