நாக்பூரில் குடிநீர் திட்ட கருத்தரங்கு - கோவை மாநகராட்சி குடிநீர் திட்டத்தை பாராட்டி நினைவுப்பரிசு!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில் 24 மணி நேர குடிநீர் திட்டம் குறித்த கருத்தரங்கில், கோவை மாநகர குடிநீர் திட்டத்தின் நவீன செயல்முறைகளை பாராட்டி, நினைவு பரிசு வழங்கப்பட்டது.


கோவை: நாக்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், கோவை மாவட்ட குடிநீர் திட்டத்தை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின்‌ வீட்டு வசதி மற்றும்‌ நகர்ப்புற விவகாரங்கள்‌ துறையின்‌ சார்பில்‌ வட இந்தியாவின்‌ 10 மாநிலங்களுக்கான மண்டலத்திற்கான 24 மணி நேர குடிநீர்‌ திட்டங்கள்‌ குறித்த கருத்தரங்கு மஹாராஷ்டிரா மாநிலம்‌ நாக்பூரில்‌ நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில்‌ நடைபெற்ற இந்த கருத்தரங்கில்‌, கோவை மாநகராட்சியின்‌ 24 மணி நேர குடிநீர்‌ திட்டம்‌ குறித்த பல நவீன செயல்முறைகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த நினைவு பரிசை, திட்ட மேலாண்மை ஆலோசனை குழு தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌, சூயஸ்‌ நிறுவன திட்ட மேலாளர்‌ சங்கராம்‌ பட்நாயக் மற்றும் புவியியல்‌ நிபுணர்‌ சத்யநலம்‌ ஆகியோர் மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்பிடம் வழங்கினர்.

கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப் தலைமையில் நடைபெற்ற‌ நுகர்வோர்‌ அமைப்புகளுடனான ஆலோசனைக்‌ கூட்டத்தின் போது, நினைவு பரிசினை வழங்கினர்.



இந்த நிகழ்வின் போது, மாநகர பொறியாளர்‌ இளங்கோவன்‌ மற்றும்‌ மாநகராட்சி உயர்‌ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...