தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றியத்தில் பாஜக கொடியேற்று விழா - முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேளாண்பூண்டி பகுதியில் நடைபெற்ற பாஜக கொடியேற்று விழாவில், பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவு மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக் குமார் கொடியேற்றி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற பாஜக கொடியேற்று விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேளாண்பூண்டி உள்ளிட்ட பகுதியில் பா.ஜ.க கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் தலைமை தாங்கினார்.



பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.



அப்போது ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமார் பேசியதாவது, திருப்பூர் தெற்கு மாவட்ட பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்களை அனைத்து கிராமப்புற ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்ப்பதே எங்களின் பணி.

வரும் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் பாரத பிரதமராக நரேந்திர மோடியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலமாக நாட்டின் வளர்ச்சி உயர பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும். மேலும், மத்திய அரசின் திட்டங்கள் சாதாரண கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டி தீவிர முயற்சி மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தெற்கு ஒன்றிய தலைவர் செல்வேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா என்கிற கோவிந்தசாமி ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சுமதி. சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணி, பாரி, முருகேசன், ஜெயக்குமார், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...