கோவையில் அறிவுரை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு அடி உதை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை!

கோவை சாய்பாபா காலனி அருகே ஆட்டோவில் மோதுவது போல் வந்ததால், பாதுகாப்பாக செல்லுங்கள் என அறிவுரை கூறிய ஆட்டோ ஓட்டுநரை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சாய்பாபா காலணி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பாதுக்காப்பாக செல்ல அறிவுறுத்திய ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை சிட்கோ பகுதியில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் ஜான்சா. நேற்று மாலை 6.45 மணியளவில் சாய்பாபா காலனி சிக்னல் அருகே ஆட்டோவில் நின்றுகொண்டு இருந்துள்ளார்.

அப்போது அவரது ஆட்டோவை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நபர்கள் ஆட்டோ மீது மோதுவது போல் வந்துள்ளனர். இதனை கண்ட அவர், இருசக்கர வாகனத்தில் இருந்த 3 பேரையும், பாதுகாப்பாக போகும்படி அறிவுறுத்தி உள்ளார்.

இதனால் கோபம் அடைந்த மூன்று பேரும், ஜான்சா ஆட்டோ சிக்னலை கடந்து செல்லும் பொழுது வழிமறித்து, வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே தள்ளி, அங்கிருந்த இரும்பு கம்பியால் அடித்து உதைத்துள்ளனர்.

தன்னை அடிக்க வேண்டாம் என ஜான்சா கேட்டபோதும், மதுபோதையில் இருந்த அந்த மர்ம நபர்கள் அடித்ததில், தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தோடு இருந்த போதும் யாரும் அக்கம் பக்கத்தினர் உதவ முன் வரவில்லை என கூறப்படுகிறது.

பின்னர், அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தோடு தன்னை மர்ம நபர்கள் அடித்து உதைத்ததாக சாய்பாபா காவல் நிலையத்தில் ஜான்சா புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சாய்பாபா காலனி போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

வாகனத்தில் பாதுகாப்பாக செல்லுங்கள் என்று அட்வைஸ் செய்த ஆட்டோ ஓட்டுனரை மர்ம கும்பல் அடித்து உதைத்த சம்பவம் சாய்பாபா காலனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...