காங்கேயம் அருகே சரக்குவேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம்!

காங்கேயம் அருகே கோயிலுக்குச் சென்று திரும்பிய வேன் மீது லாரி மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேயம் அடுத்த ஓலப்பாளையத்தை சேர்ந்த கிட்டுச்சாமி குடும்பத்தினர், கொடுமுடி கோவிலுக்கு திதி கொடுக்க இன்று அதிகாலை சென்றுள்ளனர். திதி கொடுத்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வேனில், திரும்பிக் கொண்டிருந்தனர்.



அப்போது முத்தூர் அடுத்துள்ள வாலிபனங்காடு என்ற இடத்தில் திதி கொடுக்க சென்றவர்களை ஏற்றிவந்த சரக்கு வேன் மீது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் சரக்கு வேன் தலைக்குப்புற கவிழ்ந்ததில், அதிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிட்டுசாமி, பூங்கொடி, தமிழரசி, சரோஜா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திதிகொடுக்க சென்றுவிட்டு வீடு திரும்பிய நபர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் ஓலப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...