கோவையில் மனம் திருந்திய குற்றவாளிக்கு உதவிய தன்னார்வலர்கள் - குவியும் பாராட்டு

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மனம் திருந்திய முன்னாள் குற்றவாளியான சரஸ்வதி என்பவருக்கு 25 ஆயிரம் நிதியுதவி அளித்து, மறுவாழ்வுக்கு உதவிய தன்னார்வலர்களுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்த்தவர் சரசா என்கிற சரஸ்வதி.

பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்துள்ளன. தற்போது தமிழ்நாடு முதல் அமைச்சர் போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கஞ்சாவை அறவே ஓழிக்க வேண்டும் என்ற மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்விஜயகுமார் ஆகியோரின் அறிவித்தலின்படி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவுபடி போதை இல்லா கோவையை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மனம் திருந்திய முன்னாள் கஞ்சா வழக்கு குற்றவாளியான சரசா என்கிற சரஸ்வதி என்பவருக்கு மறுவாழ்வை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் அவர் வாழ்வை சுமூகமாக நகர்த்துவதற்கு உதவும் விதமாக பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயத்தின் முயற்சியினால், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தாமோதரன் மூலம் அப்பகுதியில் உள்ள பயனியர் பள்ளியில் 1987-1988 ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் உதவியுடன் சரஸ்வதிக்கு ரூபாய் 25,000/- (இருபத்தி ஐந்தாயிரம்) உதவித்தொகையாக வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்களின் இந்த உதவியை காவல்துறை உயர் அதிகாரிகள் பெரிதும் பாராட்டினர். சரசா என்கிற சரஸ்வதி மீது கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்குகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனமாற்றத்திற்கும், அவரது எஞ்சிய வாழ்க்கையை அமைதியான முறையில் நடத்தவும் இது உதவும் என காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...