புத்தக வாசிப்பை ஏற்படுத்தும் 'புக்ஸ் ஆன் வீல்' ஆட்டோ நூலகம் - கோவையில் தொடக்கி வைத்தார் காவல் ஆணையர்!

கோவையில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி உதவியுடன் ‘புக்ஸ் ஆன் வீல்’ என்ற தலைப்பில் கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 500 ஆட்டோ நூலகங்களை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவையில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் 500 ஆட்டோக்களில் அமைக்கப்பட்ட நூலகத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கோவையில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் பங்களிப்புடன் பொதுமக்களிடம் வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் வகையில் புக்ஸ் ஆன் வீல் (Books On Wheel)என்ற தலைப்பில் 500 ஆட்டோக்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.



கோவை சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டோ நூலகத்தின் திறப்பு விழாவில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நூலகத்தை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,

இதுபோன்ற ஆட்டோ நூலகம் மற்றும் தெருமுனை நூலகங்களை இதற்கு முன்பும் திறந்து வைத்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக KIT பங்களிப்புடன் தற்போது மாநகரில் உள்ள 500 ஆட்டோக்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோவில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் இந்த புத்தகங்களை வாசித்து பயனடையும் விதமாக இது அமைந்துள்ளது.

ஆட்டோ ஓட்டுநருடன் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம். இந்த உறவை பலப்படுத்த இது ஒரு புதிய முயற்சியாக எடுத்துள்ளோம்.

இது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனக்கவலையை குறைப்பதற்கு மட்டுமல்லாமல் பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். கோவை மாநகரில் மோசடி வழக்குகள் குறித்து FIR பதிவு செய்து வருகின்றோம். இதுகுறித்து அதிகப்படியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பத்திரிக்கை, ஊடகத்துறை, நண்பர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது சம்பந்தமான பல்வேறு செய்திகளை வெளியிட்டால் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய உதவியாக இருக்கும். மோசடி வழக்குகளில் யாராவது ஏமாற்றப்பட்டு இருந்தால் உடனடியாக காவல்துறையை அணுகலாம் அவ்வாறு அணுகும் பட்சத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்கள், போக்குவரத்து விதிகளை மீறும் இளைஞர்கள் என அனைவரையும் அழைத்து முறையான போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...