உடுமலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்

உடுமலை தலைமை அஞ்சலக பணியாளர்களுக்கு, உடுமலை அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை உடுமலை தலைமை அஞ்சலக அதிகாரி கீதா தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: உடுமலையில் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தலைமை அஞ்சலக பணியாளர்களுக்காக உடுமலை அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை உடுமலை தலைமை அஞ்சலக அதிகாரி கீதா தொடங்கி வைத்தார். உதவி அஞ்சலக அதிகாரி செல்வராஜன் முன்னிலை வகித்தார்.

இம்முகாமில், உடுமலை தலைமை அஞ்சலக பணியாளர்கள், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த, கிளை அஞ்சலகத்தைச் சேர்ந்த பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

சித்த மருத்துவர்கள், கார்த்திகேயன், ஸ்ரீபப்பி, மருந்தாளுநர் பெனிலா, மருத்துவமனை பணியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட குழுவினர், சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை, அரசு மருத்துவ மனை சித்த மருத்துவ அலுவலர் லட்சுபதிராஜ், ஓய்வு பெற்ற அஞ்சலர் முகமது அலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...