கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - இருவர் கைது!

கோவையிலிருந்து கேரளாவிற்கு ஆம்னி வேனில் கடத்தப்பட்ட 1.5டன் ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 17வயது சிறுவன் உட்பட இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவையிலிருந்து வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதைத் தடுக்க கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில், டிஎஸ்பி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் சேரன் மாநகர் விளாங்குறிச்சி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதனுள் சுமார் 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் சுமார் 21 மூட்டைகள் தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் சாக்குப் பைகளில் இருந்தது.

இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், காளப்பட்டி கரையான் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவர், 17 வயது சிறுவனை உடன் வைத்துக் கொண்டு, ரேஷன் கடைகளில் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி கேரள மாநிலத்திற்கு கடத்தியது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட அரிசி சேரன் மாநகர் சிவசக்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையிலிருந்து அதன் விற்பனையாளர் கோபாலன் என்பவர் மூலமாக குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை பெற்று, அதனை சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்திச் சென்றதும் அம்பலமானது.

கடத்தப்பட்ட ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆம்னி வேனை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் மற்றும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த காளப்பட்டி நகர கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை விற்பனையாளர் கோபாலன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பாபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...