உடுமலை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ - தீத்தடுப்புப் பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக-கேரளா எல்லையில் உள்ள மறையூர் காந்தலூர் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 ஏக்கர் பரப்பில் இருந்த அரியவகை மூலிகை மரங்கள் எரிந்து சாம்பலானது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதியான மறையூர் காந்தலூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பயங்கரமான காட்டு தீ ஏற்பட்டுள்ளது.



இதனால், அரிய வகை மூலிகை மரங்கள் உட்பட சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர், கொழுந்து விட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.



மேலும் தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள வனப்பகுதியில் உடுமலை வனத்துறையினர், கோடந்தூர் ஆட்டுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே, வனப்பகுதியில் தீத்தடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு உணவு மற்றும் தீத்தடுப்பு உபகரணங்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...