உடுமலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்குப் பணத்தை திருப்பி செலுத்தியும், செலுத்தப்பட்ட தொகைக்கு உரிய ரசீது கொடுக்காததைக் கண்டித்து விவசாயிகள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் உடுமலை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. விருகல்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பழையூர், விருகல்பட்டி புதூர், மரிக்கந்தை, வல்லகுன்டாபுரம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விவசாயிகளுக்குப் பயிர் கடன் வழங்காமல் இழுபறி நீடிப்பதாகவும் முறைகேடு நடந்ததாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். விருகல்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விசாரணை நடத்த அலுவலர் நியமித்து கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயிகள் 40-க்கும் மேற்பட்டோர் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்குப் பணத்தைத் திருப்பி செலுத்தியும் செலுத்தப்பட்ட தொகைக்கு உரிய ரசீது கொடுக்கப்படவில்லை. இதனால் புதிதாகப் பயிர் கடன் வாங்க முடியாமல் உள்ளது. விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ரசீது வழங்காமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே முறைகேடு செய்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரியப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்றார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த குடிமங்கலம் காவல்துறையினர் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பையும் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவருக்கும் பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்படும் எனக் கூறியதன் பேரில் தற்காலிகமாகப் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...