பொள்ளாச்சியில் மண்ணெண்ணெய் விநியோக நிலையத்தில் முறைகேடு - பொதுமக்கள் முற்றுகை!

பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் உள்ள நுகர்வோர் வாணிபக்கழகத்தில் மண்ணெண்ணெய் முறையாக விநியோகம் செய்யாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதால், முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நுகர்வோர் வாணிபக்கழக மண்ணெண்ணெய் விநியோக நிலையத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி ஜோதி நகரில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தின் கீழ் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஜோதி நகர், காமாட்சி நகர், PKS காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் மாதம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுவதில் தொடர்ந்து முறைகேடு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த மாதம் மண்ணெண்ணெய் பெறுவதற்காக வந்த பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்காமல் ஊழியர்கள் மண்ணெண்ணெய் இல்லை எனக்கூறி அலைக்கழித்து வரும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளது.



இந்நிலையில், இன்று காலை முதல் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்களிடம் அங்கிருந்த ஊழியர்கள் மண்ணெண்ணெய் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாலையில், முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே அங்கு வந்த வாணிபக் கழக மேற்பார்வையாளர் மணிகண்டன் பொதுமக்களை ஒருமையில் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.



கூலி வேலை செய்து வரும் ஏழை எளிய மக்கள் வயதானவர்கள் ஒரு லிட்டர் மண்ணை பெறுவதற்காக மாதக்கணக்கில் அலைய வேண்டிய நிலை உள்ளது கால் கடுக்க காத்திருந்தாலும் மண்ணெண்ணெய் வழங்குவதில்லை தட்டி கேட்டால் ஊழியர்கள் ஒருமையில் பேசி அலட்சியப்படுத்தி வருவதாகவும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் முறைகேடு செய்வதாகவும் எனவே உயர் அதிகாரிகள் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...