வால்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

முதல்வர் மு.க ஸ்டாலின் 70-வது பிறந்தநாளையொட்டி வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் அணிவித்தார். நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி இன்று பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் 70ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக வால்பாறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கம் மோதிரத்தை நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் வழங்கினார்.



மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பேனா, நோட்டு, புத்தகங்களையும் பரிசாக வழங்கினர்.



பின்னர் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் அமைந்து உள்ள நகராட்சி தாவரவியல் பூங்காவில் 70 மரக்கன்றுகளை நடவு செய்தனர். அதேபோல் வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்குச் சென்று தோட்டத் தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் செல்வம், நகராட்சி கவுன்சிலர் அன்பரசன், ராஜேஸ்வரி பாலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...