கோவை அருகே குளத்தில் குளிக்க சென்ற பிளம்பர் நீரில் மூழ்கி பலி!

கோவை செல்வபுரம் அருகே செல்வ சிந்தாமணி குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பிளம்பிங் ஊழியர் கார்த்திகேயன், குளத்தின் நடுவே இருந்த பரிசலை எடுக்க முயன்ற போது சேற்றில் சிக்கியதால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த செல்வபுரம் வடக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கார்த்திகேயன்(23). இவர் தனது நண்பர்களுடன் செல்வ சிந்தாமணி குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

குளித்துக் கொண்டிருந்த போது குளத்தின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த பரிசலை எடுப்பதற்காக கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் போட்டி போட்டு நீந்திச் சென்றார்.

இந்நிலையில் பரிசலை எடுத்துவிட்டு வரும்போது கார்த்திகேயன் சேற்றில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சிறிது நேரத்தில் குளத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...