கோவை ரயில் நிலையத்தில் மார்ச் மாதம் விரைவில் நகரும் படிக்கட்டுகள்

சேலம் தெற்கு கோட்ட ரயில்வே துறை மூலம் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.1.75 கோடி ஆகும். இரண்டு நகரும் படிக்கட்டுகளுக்கு ரூ.1.5 கோடியும் மற்றும் அதை சார்ந்த மின் வேலைகள் உள்ளிட்ட கட்டிட செலவுகளாக ரூ.25 லட்சம் என மொத்தம் செலவாக ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தின் முன்பு நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது.

ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தின் முன் பகுதியில் இருந்து (PF-1A) என்ற தளத்திற்கு செல்வதற்காக வேலைபணிகள் நடைபெறுகிறது. இதில் 1 மணி நேரத்திற்கு 9 ஆயிரம் பேர் உபயோகிக்கலாம். இந்த நகரும் படிக்கட்டுகள் 4.84 மீட்டர் உயரம் கொண்டது. இதற்கான வேலைகள் (17/02/2017) அன்று துவங்கப்பட்டுள்ளது. இதன் வேலைப்பணிகள் முடிந்த நிலையில் முன்னோட்டம் இயக்கத்திற்கு பிறகு மக்கள் இதனை பயன்படுத்தலாம். வரும் மார்ச் மாதம் விரைவில் நகரும் படிக்கட்டுகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...