கோவையில் மார்ச் 5-ல் தேசிய சாராஸ் கண்காட்சி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதாக தகவல்

கோவையில் வரும் மார்ச் 5 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய சாராஸ் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் நாடு முழுவதும் உள்ள சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.



கோவை: கோவையில் வரும் 5ஆம் தேதி தொடங்க உள்ள தேசிய அளவிலான சாராஸ் கண்காட்சியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் வரும் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்கள் பொருட்களின் சாராஸ் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய ஊரக வளர்ச்சித் துறையானது கிராமப்புற கைவினை கலைஞர்கள் தங்களின் தயாரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து தேசிய அளவிலான சாராஸ் கண்காட்சி அவினாசி சாலை வஉசி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வரும் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சி தினமும் காலை 10:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் தினந்தோறும் மாலையில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்த கண்காட்சியை காண வரும் அனைவருக்கும் நுழைவு கட்டணம் ஏதுமில்லை. கண்காட்சியில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 200-க்கு மேற்பட்ட சுய உதவிக்குழுக்கள் தங்கள் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன.

இதில், கைவினைப்பொருட்கள், கைத்தறி புடவைகள், சணல், வாழைநார் மற்றும் துணிப்பைகள், மசாலா பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள், பனை வெல்லம், திண்பண்டங்கள், எண்ணெய் வகைகள், கால்மிதியடிகள், ஐம்பொன் மற்றும் அலங்கார நகைகள், மூலிகை பொருட்கள், பூஜை பொருட்கள், இயற்கை வலி நிவாரணிகள், மென்பொம்மைகள், மற்றும் கிருமிநாசினிகள் போன்ற பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது.

இந்த கண்காட்சியில் ஊரகப்பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள் தங்களது உற்பத்தி பொருட்களுடன் கலந்து கொள்ள Exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...