கோவையில் காதல் விவகாரத்தில் தந்தை, மகன் மீது தாக்குதல் - 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் அவரது தந்தை ராஜசேகர் மீது இரும்பு கம்பி, சுத்தியல் மூலம் தாக்குதல் நடத்திய விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அருகே காதல் விவகாரத்தில் தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் உள்பட மூவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீளமேடு அடுத்த அண்ணா நகர் ஆறுமுகம் லேஅவுட் பகுதியில் வசிப்பவர் ராஜசேகர். இவர் அதே பகுதியில் மெஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவரது மகன் ஹரிஹரன் (22), அவரது தந்தையின் ஓட்டலிலேயே வேலை செய்து வருகிறார். இதனிடையே இவர், ஆவராம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதே பெண்ணை விக்னேஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் விக்கி என்ற விக்னேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் ஹரிஹரன் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்.

அப்போது ஹரிஹரனை சுத்தியலால் தாக்கிய அந்த கும்பல், அவரது தந்தை ராஜசேகரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் தந்தை, மகன் இருவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு, 3 பேரும் தப்பிச்சென்றுள்ளனர்.

படுகாயம் அடைந்த ஹரிஹரன், அவரது தந்தை ராஜசேகர் ஆகியோர் அவர்களது உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காயமடைந்த ஹரிஹரன் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் விக்கி என்ற விக்னேஷ் உட்பட 3 பேர் மீது கொலை முயற்சி, தாக்குதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...