சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவின் கோரிக்கையில் எவ்வித நியாயம் இல்லை, கோவையில் வைகோ கருத்து.


சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவின் கோரிக்கையில் எவ்வித நியாயம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அரசியல் சூழல் குறித்து தாம் எந்தவிதமான கருத்துக்களையும் கூறவில்லை எனவும் இன்று சட்டமன்றத்தில் திமுக ரகசிய வாக்கெடுப்பு நடத்த விடுத்த கோரிக்கை நியாயம் இல்லை எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இன்று கடைபிடிக்கப்பட்ட நடைமுறைதான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறிய அவர் ரகசிய வாக்கெடுப்பு என்பதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவிதமான சலுகையும் வழங்கப்படவில்லை எனவும் அவர் அப்போது தெரிவித்தார். எனவே இந்த கோரிக்கைகளை முன்வைத்து திமுக சட்டமன்றத்தில் நடத்திய விவாதங்களும், அமளிகளும் தேவையில்லாத ஒன்று எனவும் வைகோ அப்போது குறிப்பிட்டார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...