கோவை பேருந்தில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு - மர்ம நபருக்கு போலீஸ் வலை

கோவை வடவள்ளியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி, உக்கடத்திற்கு பேருந்தில் செல்லும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் நகையை திருடிச் சென்ற நபரை உக்கடம் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தகுமாரி (வயது62). இவர் டவுன்ஹால் பகுதிக்கு தனிப்பட்ட வேலையாக சென்றார்.

வேலையை முடித்துவிட்டு வடவள்ளி செல்வதற்காக டவுன்ஹாலில் இருந்து உக்கடத்திற்கு ரூட் நெம்பர் 33 பேருந்தில் அவர் ஏறி பயணித்துள்ளார்.

பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில், மூதாட்டி உக்கடம் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.

அப்பொழுது தன் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலி மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர், பேருந்து நிலையம் அருகே உள்ள உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் வடவள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...