கோவை ஆர்.எஸ் புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல்! - வாகன ஓட்டிகள் அவதி

காந்திபுரம், ஒண்டிபுதூர், டவுன்ஹால் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை வழியாக தான் செல்கிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


கோவை: ஆர்.எஸ் புரம் டிபி ரோட்டில் இருபுறங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவையில் ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். காந்திபுரம், ஒண்டிபுதூர், டவுன்ஹால் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இந்த சாலை வழியாகத் தான் செல்கிறது.

இதுதவிர இந்த பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாகப் பொருட்கள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதிக்கு வருகின்றனர்.

இதனால் எப்போதும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இந்த சாலையின் வலது புறமும், இடது புறமும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

இந்த சாலையில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்கச் செல்கிறார்கள். அவர்கள் வரும் வரை அந்த கார் அங்கேயே நிற்கும்.

இதனால் மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையின் ஒரு புறத்தில் மட்டும் தான் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும் எனப் போக்குவரத்து போலீசார் கூறினர். விதிமுறை விதித்துள்ளனர். அனைவருமே அதனை கடைபிடித்து வந்தனர். ஒரு மாதம் வலது புறமும், மற்றொரு மாதம் இடது புறமும் நிறுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

அதன்படி அனைவரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி வந்தனர். ஆனால் தற்போது போலீசார் எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதனால் பகுதிக்கு 4 சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் சாலையின் இரு புறங்களிலும் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால் பல நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முன்பு போலீசார் வந்து வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

ஆனால் தற்போது கண்டுகொள்வதில்லை. இதனால் அனைத்து வாகன உரிமையாளர்களும் அவர்கள் இஷ்டத்திற்கு வாகனத்தை விட்டு செல்கிறார்கள். எனவே வாகனங்களை வரைமுறைப்படுத்தி நிறுத்தினால் மட்டுமே இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு ஒரு தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...