கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டு தீ அணைப்பு - மீண்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவை வெள்ளியங்கிரி மலையில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து இரவு முழுதும் போராடி தீயை கட்டுப்படுத்திய நிலையில், இன்று பிற்பகல் முதல் பக்தர்கள் மலையேற அனுமதி.


கோவை: வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டு தீ அணைக்கப்பட்டதால் மீண்டும் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலை தொடரில் 4 மற்றும் 5 ஆவது மலையில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பழங்குடி கிராம மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக பக்தர்கள் செல்லும் பாதையின் அருகே காட்டு தீ ஏற்பட்டதால் சனிக்கிழமை மாலையில் இருந்து பக்தர்கள் மேலே செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் மலைக்கு சென்றவர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே இரவு முழுவதும் போராடி இன்று அதிகாலை 4 மணியளவில் காட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் முதல், பக்தர்கள் வழக்கம் போல வெள்ளியங்கிரி மலையில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பக்தர்கள் மேலே எடுத்துச் செல்கிறார்களா என்பதையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....