கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டு தீ அணைப்பு - மீண்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவை வெள்ளியங்கிரி மலையில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து இரவு முழுதும் போராடி தீயை கட்டுப்படுத்திய நிலையில், இன்று பிற்பகல் முதல் பக்தர்கள் மலையேற அனுமதி.


கோவை: வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டு தீ அணைக்கப்பட்டதால் மீண்டும் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலை தொடரில் 4 மற்றும் 5 ஆவது மலையில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பழங்குடி கிராம மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக பக்தர்கள் செல்லும் பாதையின் அருகே காட்டு தீ ஏற்பட்டதால் சனிக்கிழமை மாலையில் இருந்து பக்தர்கள் மேலே செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் மலைக்கு சென்றவர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே இரவு முழுவதும் போராடி இன்று அதிகாலை 4 மணியளவில் காட்டு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் முதல், பக்தர்கள் வழக்கம் போல வெள்ளியங்கிரி மலையில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை பக்தர்கள் மேலே எடுத்துச் செல்கிறார்களா என்பதையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...