மருத்துவ சிகிச்சைக்காக கோவை வந்த வெளிநாட்டுப் பெண் மரணம் - போலீசார் விசாரணை!

கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற வந்திருந்த வெளிநாட்டுப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே திருமலையம்பாளையத்தில் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி உலகில் பல பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், மூளை சுருக்கம் மற்றும் வாத நோயால் பாதிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த அசி கோமர்ஸ்(வயது65) என்பவர், இரண்டு வருடமாக பல இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று சரியாகாததால், கடந்த மாதம் 7ம் தேதி தனது கணவர் மைக்கேல் கோமர்சுடன் வந்து ஆயுர்வேத மையத்தில் சேர்ந்து அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அங்குள்ள மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளனர். காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து, உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை செய்த பின்னர் அவரது கணவர் மைக்கேல் கோமர்சிடம் அசி கோமர்ஸ் உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மையத்திற்கு சிகிச்சை பெற வந்த வெளிநாட்டு பெண் காய்ச்சல் ஏற்பட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...