பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பு - பத்திரமாக மீட்ட வனத்துறை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புளியங்கண்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கியிருந்த 6 அடி நீள மலைப்பாம்பை, வேட்டை தடுப்பு காவலர் சக்திவேல் லாவகமாக பிடித்தார். பின்னர் பாம்பு, ஆழியார் அருகே உள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் வேலை செய்த பகுதியில் மலைப்பாம்பு பதுங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



இது குறித்து தோட்டத்து உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தோட்டத்து உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.



பின்னர் அங்கு விரைந்து வந்த வனத்துறை வேட்டை தடுப்பு காவலர் சக்திவேல் என்பவர் சுமார் ஆறு அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தார்.

இதையடுத்து, அந்த மலைபாம்பு ஆழியார் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

Newsletter

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...