சீமானை கைது செய்யக்கோரி கோவையில் ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் மாவட்டத் தலைவர் கோபால் தலைமையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், முதலியார்களைப் பற்றி உயர்வாகவும், அருந்ததியர்கள் ஆந்திராவிலிருந்து தூய்மை பணி செய்வதற்காக விஜயநகர பேரரசால் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்பது போல் பேசியிருந்தார். இது அருந்ததியர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் சீமானுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.



இந்நிலையில் இன்று சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தின் மீது ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் கற்களை வீசி சீமானுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் சென்னை போரூர் பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.



இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் கோபால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டச் செயலாளர் குப்புராஜ், தாமரை வீரன், மல்லேஷ் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சீமானை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் சீமான் தமிழ்நாட்டில் சமூக பதட்டத்தை உருவாக்குவதாகவும் அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...