வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை - தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த கோவை நீதிமன்றம்!

கோவையில் கடந்த 2021-ம் ஆண்டு 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அவரது வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ நீதிமன்றம், வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த பெண், தனது கணவரை விட்டு பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்தார். முதல் கணவருக்கு பிறந்த 13 வயதுடைய மகளுடன், இரண்டாவது கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2021 ல் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அவரது வளர்ப்பு தந்தை பாலியல் தொல்லை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தலைமையாசிரியர் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிறுமியின் வளர்ப்பு தந்தை மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...