மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு குழு ஆய்வுக் கூட்டம் - தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ ஆப்சென்ட்!

கோவையில் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் மற்றும் கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், அதிமுக எம்எல்ஏ.,க்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.


கோவை: கோவை மாவட்டத்தில் மாதம் தோறும் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி பணிகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு சார்பில் நடைபெற்றுவருகிறது.



அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி முன்னிலை வகித்துள்ளார்.



கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்சுணன், அமுல்கந்தசாமி, செல்வராஜ் உள்ளிட்ட ஏழு பேரும், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி பணிகள், பொதுமக்கள் குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தாமதமாக நடைபெற்று வரும் பணிகள் மற்றும் காரணங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...