வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் - செங்கல்பட்டில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தவர் கைது

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள் வெளியிட்ட விவகாரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரை செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் போலீசார் கைது செய்தனர்.


தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. இது பீகார் சட்டப்பேரவை வரை எதிரொலித்து பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியது.

இதையடுத்து, தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதேபோல், பீகார் மாநிலத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 10 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் புலம்பெயர் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில ஏடிஜிபி ஜிதேந்திர சிங் கங்காவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சிக்கிய உத்தரபிரதேச மாநில பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவ், பத்து நாட்களுக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, முன்ஜாமீன் உள்ளிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



இந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் யாதவ் என்ற நபர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அடுத்தடுத்து நிகழும் கைது நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கட்சியினரின் கண்டனங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிவருகிறது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...