கோவை உக்கடம் அருகே பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் - ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

உக்கடம் அருகேயுள்ள சாரமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில், பெண்களுக்கான உரிமைகள், சட்ட பாதுகாப்பு, சொத்துரிமை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் உக்கடம் அருகே நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் அறிவுறுத்தலின்படி, தேசிய மகளிர் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கோவை உக்கடம் அருகே பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



உக்கடம் அடுத்த சாரமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிமன்றத்தின் நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சட்டப்பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்த முகாமில் சட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள், பெண் பாதுகாப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.ஜே.அபிராமி பெண்களின் உரிமைகள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினை சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...