கோவை வெள்ளலூரில் பழக்கடை உரிமையாளரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு

கோவை வெள்ளலூர் பெருமாள் ஶ்ரீநகரில் பழக்கடை நடத்தி வரும் பாலமுருகன் என்பவரை, தொழில் போட்டி காரணமாக தகாத வார்த்தைகளில் பேசி, கல்லால் தாக்கிய பிரேம்குமார் மற்றும் தங்கவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: வெள்ளலூரில் பழக்கடை உரிமையாளரை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் பெருமாள் ஶ்ரீநகரை சேர்ந்தவர் பாலமுருகன் (19). இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடையின் அருகே வெள்ளலூர் அம்மன் நகரை சேர்ந்த பிரேம்குமார் (29) என்பவரும் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

தொழில் ரீதியாகப் பாலமுருகன் மற்றும் பிரேம்குமார் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பாலமுருகன் கடையிலிருந்த போது அங்குச் சென்ற பிரேம்குமார் மற்றும் தங்கவேல் (40) ஆகிய இருவரும் பாலமுருகனை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஓரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரேம்குமார், பாலமுருகனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமார் மற்றும் தங்கவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...