கோவை வெள்ளலூரில் பழக்கடை உரிமையாளரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு

கோவை வெள்ளலூர் பெருமாள் ஶ்ரீநகரில் பழக்கடை நடத்தி வரும் பாலமுருகன் என்பவரை, தொழில் போட்டி காரணமாக தகாத வார்த்தைகளில் பேசி, கல்லால் தாக்கிய பிரேம்குமார் மற்றும் தங்கவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: வெள்ளலூரில் பழக்கடை உரிமையாளரை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் பெருமாள் ஶ்ரீநகரை சேர்ந்தவர் பாலமுருகன் (19). இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடையின் அருகே வெள்ளலூர் அம்மன் நகரை சேர்ந்த பிரேம்குமார் (29) என்பவரும் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

தொழில் ரீதியாகப் பாலமுருகன் மற்றும் பிரேம்குமார் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பாலமுருகன் கடையிலிருந்த போது அங்குச் சென்ற பிரேம்குமார் மற்றும் தங்கவேல் (40) ஆகிய இருவரும் பாலமுருகனை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஓரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரேம்குமார், பாலமுருகனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமார் மற்றும் தங்கவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...