சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, “சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்காவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குங்கள்” என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.


கோவை: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சரும், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகருமான சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



பிரச்சாரத்திற்கு முன், வடவள்ளியில் அமைந்துள்ள முத்தப்பசாமி கோவிலுக்கு சென்ற சுரேஷ் கோபி மற்றும் வானதி சீனிவாசன் சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்கு திரண்டிருந்த மலையாளி மக்களிடம் உரையாற்றிய சுரேஷ் கோபி, வானதி சீனிவாசனை தனது சகோதரியாக குறிப்பிட்டு, அவரை மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.



தொடர்ந்து முத்தப்பசாமி கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு, வடவள்ளி மகாராணி அவென்யூ, காட்டு விநாயகர் கோவில் பகுதி, டாட்டா நகர் உள்ளிட்ட இடங்களில் சுரேஷ் கோபி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “வானதி சீனிவாசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றினார். மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்தில் தைரியமாக குரல் கொடுத்தார். சட்டமன்றத்தின் சிம்மக் குரலாக விளங்கிய வானதி அக்காவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்”, என்றார்.

மேலும், அவரைப் போன்ற பலர் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும். அதற்காக கோவை வடக்கு மக்கள் வானதி சீனிவாசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவையில் வட்டிப் பணத்தை வசூலிக்க சென்ற பைனான்சியர் கொலை: ராஜஸ்தான் நபர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைனான்சியர் அபுதாகிர் பாஷா கொலை செய்யப்பட்ட வழக்கில், வட்டிக்குப் பெற்ற பணத்தை திரும்பக் கே...

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...