சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க POCSO நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீசார் ஐந்து நாட்கள் கோரியிருந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் மோகன்ராஜை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க POCSO நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.




இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்திக் (33) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றம் தொடர்பான மேலும்தகவல்களை சேகரிக்கும் நோக்கில் இருவரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சூலூர் போலீசார் கோவை POCSO நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.




இதையடுத்து, கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள POCSO நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பகவதி அம்மாள், நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனி அறையில் இருவரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், காவல்துறை தரப்பில் ஐந்து நாட்கள் காவல் கோரப்பட்டிருந்த நிலையில், மூன்று நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.




முன்னதாக, இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் இருந்து தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மத்திய சிறையில் நீதிபதி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில், சம்பவத்தன்று சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படும் கார்த்திக் மற்றும் மோகன்ராஜை சாட்சிகள் அடையாளம் காட்டியிருந்தனர்.




சம்பவம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், காவல் விசாரணையின் போது கூடுதல் ஆதாரங்கள், சம்பவத்தின் பின்னணி மற்றும் குற்றத்தில் தொடர்புடைய பிற விவரங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...