"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட" என்ற வாசகத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.


கோவை: பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகியுள்ள சூழலில், கோவை நகரில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள புதிய போஸ்டர்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அண்ணாமலையின் எதிர்கால அரசியல் திட்டம் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வரும் சூழலில், சப்பீபத்தில், கோவையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய அண்ணாமலை ஆதரவு போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி பரவலான கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அதன்படி,அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிய மறுநாள,நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்துடன், "தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள்,

கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் பெயர்கொண்டு ஒட்டப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாகவே கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையை மையப்படுத்திய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனிக்கட்சி தொடங்கக்கூடும் என்ற கருத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையிலான இந்த போஸ்டர்கள், ரசிகர் மன்றங்கள் மற்றும் அரசியல் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டு வந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த புதிய போஸ்டரும் இணைந்துள்ளதால், அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.



ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்தை 2017ஆம் ஆண்டு அறிவித்த பின்னர், 2021ஆம் ஆண்டு உடல்நலக் காரணங்களை முன்வைத்து அரசியலில் இருந்து விலகியதை நினைவுகூரத்தக்கது. அதன் பின்னர், அவரது ரசிகர் மன்றங்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளன. இந்த சூழலில், அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்றம் போஸ்டர் ஒட்டியுள்ளது, தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி சாத்தியங்கள் குறித்த ஊகங்களை வலுப்படுத்துகிறதா..? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

Newsletter

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...