"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட" என்ற வாசகத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.


கோவை: பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகியுள்ள சூழலில், கோவை நகரில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள புதிய போஸ்டர்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அண்ணாமலையின் எதிர்கால அரசியல் திட்டம் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வரும் சூழலில், சப்பீபத்தில், கோவையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய அண்ணாமலை ஆதரவு போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி பரவலான கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அதன்படி,அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிய மறுநாள,நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்துடன், "தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள்,

கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் பெயர்கொண்டு ஒட்டப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாகவே கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையை மையப்படுத்திய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனிக்கட்சி தொடங்கக்கூடும் என்ற கருத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையிலான இந்த போஸ்டர்கள், ரசிகர் மன்றங்கள் மற்றும் அரசியல் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டு வந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த புதிய போஸ்டரும் இணைந்துள்ளதால், அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.



ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்தை 2017ஆம் ஆண்டு அறிவித்த பின்னர், 2021ஆம் ஆண்டு உடல்நலக் காரணங்களை முன்வைத்து அரசியலில் இருந்து விலகியதை நினைவுகூரத்தக்கது. அதன் பின்னர், அவரது ரசிகர் மன்றங்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளன. இந்த சூழலில், அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்றம் போஸ்டர் ஒட்டியுள்ளது, தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி சாத்தியங்கள் குறித்த ஊகங்களை வலுப்படுத்துகிறதா..? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...