கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்று தப்பிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய வாடகை அறை தேடிச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவரை அறைக்குள் அடைத்து வைத்து, கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி, தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர், குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி வந்த அவர், கடந்த 10 நாட்களாக தனியாக தங்க புதிய வாடகை அறை தேடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருக்கு அறிமுகமான நண்பர் ஒருவர் குனியமுத்தூர் இ.பி. காலனியில் வாடகை அறை இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, மாணவர் அந்த அறையைப் பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.

அப்போது, அறைக்குள் ஏற்கனவே இருந்த குனியமுத்தூரைச் சேர்ந்த சலகா என்ற ஆகாஷ், பாண்டி மற்றும் அவர்களது கூட்டாளி ஒருவர், மாணவரை அறைக்குள் வைத்து கதவை உள்புறமாக பூட்டி அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர், கேசவனிடம் பணம் கேட்டு மிரட்டிய அவர்கள், பணம் தர மறுத்ததால் இரும்புக் கம்பியால் அவரது முதுகில் தாக்கியதுடன், கத்தியால் தோள்பட்டை மற்றும் முதுகுப் பகுதியில் குத்தி காயப்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி தாங்க முடியாமல் அலறிய மாணவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கும்பல், அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்ததுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், குடும்பத்தினரிடம் பேசி ரூ.2 லட்சம் பெற்றுத் தர வேண்டும் என மிரட்டி, மாணவரை அறைக்குள் அடைத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் தரப்பில் கூறுகையில், சம்பவ இடத்திற்கு சென்றபோது குற்றவாளிகள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, முதல் மாடி ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பியதால், சிமெண்ட் மேற்கூரை சீட்டுகள் உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவர் அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சலகா என்ற ஆகாஷ், பாண்டி உள்ளிட்ட மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...