உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


கோவை: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள வணிக வரித்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) பொன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்போது, புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், சமூக சீர்கேடுகள் மற்றும் அனைத்து வகையான புகையிலைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.



நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்த விளையாட்டு மற்றும் தடகள வீரர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், புகையிலை ஒழிப்பு குறித்த கையெழுத்து விழிப்புணர்வு இயக்கமும் நடத்தப்பட்டது.

புகையிலை இல்லா சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

சமூக நலன், பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Newsletter

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...