கோவை ஆவின் நிறுவனத்தில் முறைகேடு - 7 பேர் சஸ்பெண்ட், 6 பேர் பணியிடமாற்றம்!

கோவை பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவின்பால் உற்பத்தி நிறுவனத்தில் 38 லட்சம் ரூபாய் முறைகேடு செய்தது தணிக்கையில் தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேரை தற்காலிக பணிநீக்கமும், 6 பேரை இடமாற்றம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை பேரூர் பச்சாபாளையத்தில் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தில், நாளொன்றுக்கு, 2 லட்சத்து, 17 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக பால்கோவா, பால்பேடா, பால் அல்வா, கேரட் மைசூர்பா உள்ளிட்ட 22 வகையான பால் உபபொருட்கள் மற்றும் இனிப்புகள் தயாரித்து, விற்கப்படுகிறது.

இவற்றை விற்பனை செய்ததில், ரூ.38 லட்சம் வரை முறைகேடு மற்றும் கையாடல் நடந்தது கண்டறியப்பட்டது. இதில், தொடர்புடைய மூன்று ஊழியர்கள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக பல்வேறு கட்ட விசாரணை நடத்தியபின், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றபோது கையாடல் மற்றும் முறைகேடு செய்த தொகையை திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டனர்.

ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதற்கான காரணம் அறிய தணிக்கையில் ஈடுபட்டபோது முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தது. மன்னிக்கக்கூடிய குற்றம் புரிந்த, 6 பேர் தொலைதூர நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பல லட்சம் ரூபாய் முறை கேடு மற்றும் கையாடல் செய்த மூவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருவர் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால், அவரது பணப்பலன்களில் இருந்து, முறைகேடு செய்த தொகையை பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...