கோவையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி - சிகிச்சை பலனின்றி பெண் பலி!

கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் லாட்ஜில் தங்கி இருந்த கிருஷ்ணன் - கிருத்திகா இருவரும் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருத்திகா (வயது 26). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கிருத்திகா கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோயமுத்தூர் வந்தனர். கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறைத்து எடுத்து தங்கினர். அங்கு 2 பேரும் எலி மருந்து குடித்தனர். வாடகை கேட்க சென்ற தங்கும் விடுதி ஊழியர்கள், இதைப் பார்த்து 2 பேரையும் மீட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...