உடுமலை அருகே காலாவதியான மருந்துகளை கொட்டிய வாகனம் - விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம்!

உடுமலை அடுத்த பட்டிவீரன்பட்டியில் உள்ள குளத்தின் அருகே காலாவதியான மருந்துகளை கொட்டுவதற்காக வந்த வாகனத்தை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்திற்கு ஊராட்சி நிர்வாகம் ரூ.6,000 அபராதம் விதித்தது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காலாவதியான மருந்துகளை கொட்டுவதற்காக வந்த வாகனத்தில் விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



உடுமலை அடுத்த சின்னவீரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் உள்ள குளம் அருகே கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் காலாவதியான ஊசி, மருந்து, மாத்திரைகள், பவுடர் ஆகியவை மூட்டை மூட்டையாக கொட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பகல் நேரத்தில் காலாவதியான மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை கண்ட விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி நிர்வாகம் காலாவதியான மருந்துகளை விவசாய நிலங்களில் கொட்டிய மருந்து கம்பெனி நிறுவனத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, இப்பகுதியில் கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ள நிலையில் குளம் அருகே ஏராளமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு தினமும் விட்டு வருகின்றனர். இந்த நிலையில் காலாவதியான மருந்துகளை உட்கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாடு ஒன்று உயிரிழந்துள்ளது.

மேலும் மருந்துகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் கால்நடைகள் தொடர்ந்து பாதிக்கும் அபாயம் இருந்த நிலையில் விவசாயிகள் தீவிரமாக கண்காணித்து இன்று மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த வாகனம் சிறைபிடிக்கப்பட்டது.

ஆனால் ஊராட்சி நிர்வாகம் கண் துடைப்பிற்காக குறைந்தபட்சம் அபராத தொகை விதித்து உள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...