வடகோவை அருகே தண்டவாளத்தில் கிடந்த சடலம் - ரயில்வே போலீசார் விசாரணை!

வடகோவை ரயில்நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த 40 மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் விபத்தா? தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை வடகோவை ரயில்நிலையம் அருகே ரயிலில் சிக்கி ஒருவர் பலியான நிலையில், விபத்தா, தற்கொலையா என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடகோவை ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கதக்க நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில், அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இது விபத்தா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...