கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமான அரவிந்த் மேனன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்றும், மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மாநில அரசின் திட்டங்களாகக் காட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
Coimbatore: கோவை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமான அரவிந்த் மேனன், கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்று வரும் சுமார் 1.2 கிலோமீட்டர் நீள மேம்பாலப் பணிகளை செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டார்.

அப்போது, மேம்பாலப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களிடம் பணிகளின் தற்போதைய நிலை, எஞ்சியுள்ள பணிகள் மற்றும் அவை எப்போது நிறைவடையும் என்பது குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேம்பாலப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடையும் எனத் தெரிவித்தார். இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, மேட்டுப்பாளையம் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றார்.
மேலும், மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கி வருவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் அந்தத் திட்டங்கள் மாநில அரசின் திட்டங்களாகக் காட்டப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மாநில அரசின் திட்டங்களாக விளம்பரப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
தமிழக வெற்றி கழக ஆட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய ஆட்சியில் மூன்று வயது பெண் குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். மேலும், மின்துறையிலும் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், இதுபோன்ற விவகாரங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல பாஜக தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.
அப்போது, மேம்பாலப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களிடம் பணிகளின் தற்போதைய நிலை, எஞ்சியுள்ள பணிகள் மற்றும் அவை எப்போது நிறைவடையும் என்பது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேம்பாலப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடையும் எனத் தெரிவித்தார். இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, மேட்டுப்பாளையம் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றார்.
மேலும், மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கி வருவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் அந்தத் திட்டங்கள் மாநில அரசின் திட்டங்களாகக் காட்டப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மாநில அரசின் திட்டங்களாக விளம்பரப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
தமிழக வெற்றி கழக ஆட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய ஆட்சியில் மூன்று வயது பெண் குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். மேலும், மின்துறையிலும் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், இதுபோன்ற விவகாரங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல பாஜக தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.