கோவையில் இருவேறு இடங்களில் சூதாட்டம் ஆடிய 10 பேர் கைது - ரூ.2,600 பணம் பறிமுதல்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இருவேறு இடங்களில் சூதாட்டம் ஆடிய 10 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.2,600 பணத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை ஜாமீனில் விடுவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் சூதாட்டம் ஆடுவது சட்டப்படி குற்றம். ரம்மி உள்ளிட்ட சீட்டாட்டம் ஆடுவதனால் நடுத்தர மற்றும் ஏழை எளியோர் தங்கள் சொத்துகளை இழந்து விடுகின்றனர்.

அந்த வகையில் சூதாட்டம் ஆடுபவர்களை தடுத்து வரும் போலீசாருக்கு, கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சிலர் சூதாட்டம் ஆடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முத்தண்ணன் குளம் பகுதியில் செந்தில் குமார், சவுகத் அலி, ஆறுமுகம், திருமுருகன் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் சூதாட்டம் ஆடிக் கொண்டிருப்பதை கண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து, ரூ.1,300 பணம் மட்டும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் கிருஷ்ணாபதிகுளம் பகுதியில் சீட்டாடிக் கொண்டிருந்த ஜெகதீஷ், சரவணகுமார், மாணிக்கம், பாட்ஷா, கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்த ஆர்.எஸ்.புரம் போலீசார் அவர்களிடம் இருந்து 1300 ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

கைதானவர்களில் பெரும்பாலானோர் கடைநிலையில் பணியாற்றும் கூலி தொழிலாளிகள். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பத்து பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...