நாளை பிளஸ்2 பொதுத்தேர்வு:கோவையில் 35,541 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் - சி.இ.ஓ தகவல்

தமிழகத்தில் நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ,541 மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதாகவும், இதற்காக 254 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்.


கோவை: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை 13ந் தேதி, தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம், ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 35 ஆயிரத்து 541 பேரும், பிளஸ்-1 பொதுத் தேர்வை 34 ஆயிரத்து 259 பேரும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 41ஆயிரத்து 526 பேரும் எழுத உள்ளனர்.

இதற்காக கோவை மாவட் டத்தில் 254 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன, இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டன.

அவை கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் கோவை மாவட்டத்தில் 12 கட்டுக்கோப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இதில், கோவை டவுன்ஹாலில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பொதுத்தேர்வுக்கான வினாத் தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் அந்த அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.

இதுபோல் கோவை மாவட்டத்தில் மற்ற வினாத்தாள் மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...