கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜூலை 15 முதல் 18 வரை நான்கு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது. ஐந்து மண்டலங்களில் காலை 10 முதல் மாலை 5 வரை முகாம் இயங்கும். 2016-க்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைகள் விண்ணப்பிக்கலாம்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் 100 வார்டுகளில் அமைந்துள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்துவதற்கான சிறப்பு முகாம் வரும் ஜூலை 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் செயல்படும் என மாநகராட்சி ஆணையர் Khata Ravi Teja, IAS தெரிவித்துள்ளார்.

வரன்முறைப்படுத்தலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மனைகள் அக்டோபர் 20, 2016-க்கு முன்பு பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு முன்பே விண்ணப்பதாரரின் பெயருக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற தகுதி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் குறைந்தபட்சம் 4.8 மீட்டர் அகலமுள்ள பொதுச் சாலை அணுகல் இருப்பது அவசியம்.


முகாமில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் இணையவழியில் ரூ.500 செலுத்திய ரசீது, விண்ணப்பப் படிவம், பத்திரம் மற்றும் மூலப்பத்திரம், பட்டா/DSLR/FMB, மனை வரைபடம் (3 நகல்கள்), லேஅவுட் வரைபடம், டோபோ ஸ்கெட்ச் மற்றும் வில்லங்கச் சான்று (EC) உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வரன்முறைக் கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.175 என்றும், அபிவிருத்திக் கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்களை செலுத்தி மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்.


எனவே, தகுதியுடைய பொதுமக்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு இத்திட்டத்தின் பயனைப் பெறுமாறு மாநகராட்சி ஆணையர் Khata Ravi Teja, IAS கேட்டுக்கொண்டுள்ளார். மனை உரிமையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் மனைகளை சட்டப்படி வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...